கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

படங்களை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டும் பாஜகவிற்கு காஷ்மீர் பாதுகாப்பு குறித்து கவலை இல்லை : சஞ்சய் ரௌத்

படங்களை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டும் பாஜகவிற்கு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கவலை இல்லை என சிவசேனை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத்  பாஜகவை விமர்சித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2022, 2:11 pm

DIN

படங்களை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டும் பாஜகவிற்கு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கவலை இல்லை என சிவசேனை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத்  பாஜகவை விமர்சித்துள்ளார்

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சஞ்சய் ரௌத் இதனை தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “ காஷ்மீர் பாதுகாப்பு விஷயத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவதற்கு எதிராக பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொள்ளுமா? காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இஸ்லாமிய பாதுகாப்புப் படை வீரர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், பாஜக “காஷ்மீர் ஃபைல்ஸ்” “சம்ரத் பிரித்விராஜ்” போன்ற படங்களை விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு இல்லாத சூழலில் பாஜக தனது 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசி வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும் போது தான் பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து முதன் முதலாக வெளியேற்றப்பட்டனர்” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.