/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை
Updated On :1 பிப்ரவரி 2024, 9:27 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த முகமது அமீன் எனத் தெரிய வந்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு, செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதத்தைப் புதுப்பிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

தோடா மாவட்டத்தின் தண்டல்-கஸ்திகர் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இர்ஷாத் அகமது கைது செய்யப்பட்டதாக ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கையின்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து வெடிகுண்டு, தொலைபேசி மற்றும் பிற பயங்கர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.