அசாமில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எச்எஸ்எல்சி தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி 56.49 சதவீதமாக உள்ளது.
இந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவிகளை விட 4.31 சதவீத மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மொத்தம் 4,05,582 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
அதில் 2,29,131 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 65,175 மாணவர்கள் முதல் இடத்தையும், 99,854 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 64,101 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும், 8,373 மாணவர்கள் (510க்கு மேல்) மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 14,047 பேர் 450-க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
லக்கிம்பூர் மாவட்டத்தில், செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியின் ரக்டோத்பால் சைகியா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், நல்பாரி லிட்டில் பிளவர்ஸ் பள்ளியைச் சேர்ந்த புயாஷி மேதி மொத்தம் 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


