மகாராஷ்டிரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தாண்டு 12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
வாரிய தலைவர் ஷரத் கோசாவி அறிவித்த முடிவுகளின்படி,
இந்தாண்டு மாணவிகளின் தேர்ச்சி 95.35 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி 93.29 சதவீதமாகவும் உள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்வில் இந்தாண்டு மொத்தம் 14,59,664 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.அவர்களில் 14,39,731 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,56,604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் கொங்கன் பிரிவு 97.21 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து நாக்பூர் - 96.52 சதவீதம், அமராவதி - 96.34 சதவீதம், லத்தூர்- 95.25 சதவீதம், கோலாப்பூர்- 95.07 சதவீதம், நாசிக்- 95.03 சதவீதம், அவுரங்காபாத்- 94.97 சதவீதமும், புணே- 93.61 சதவீதமும், மும்பை பிரிவு 90.91 சதவீத தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது.
அறிவியல் பிரிவில் 98.30 சதவீதமும், கலைப் பிரிவில் 90.51 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 91.71 சதவீதமும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 92.40 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கோசாவி தெரிவித்தார்.
இதையும் படிக்க: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்