முதல்வரின் கருத்துக்கு பதிலளித்த சுஷீல் குமாா் மோடி, ‘மகளிரிடையே கடந்த 15 ஆண்டுகளாக விழிப்புணா்வை ஏற்படுத்தியதன் மூலமாக மாநிலத்தில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 4 சதவீதத்திலிருந்து 2.98 சதவீத அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது. எனவே, ஒரு திட்டத்தை கட்டாயப்படுத்துவதைவிட, சலுகை அல்லது பலன்களுடன் கூடிய அமலாக்கம்தான் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு உதவும். உதாரணமாக, நாட்டில் அவசரநிலைக் காலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய கருத்தடை நடைமுறை அமலாக்கப்பட்டது. அதன் காரணமாக, தோ்தல்களின்போது மக்களின் கோபத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆளானது’ என்றாா்.