குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஒடிசாவில் கவிழ்ந்த எண்ணெய் லாரி: ஓடிச் சென்று உதவியவர்களுக்கு நேர்ந்த கதி

ஒடிசா மாநிலம் நயாபார் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

கோப்புப் படம்

Published On :6 பிப்ரவரி 2024, 6:17 pm IST


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் நயாபார் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

பாரதீப் துறைமுகத்திலிருந்து சம்பல்பூர் பகுதிக்கு எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாடா பந்துசாரா பாலத்தில் எண்ணெய் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கீழே விழுந்தது.

இந்த சம்பவம் நள்ளிரவு 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. லாரி விழுந்த வேகத்தில், டேங்கரில் இருந்த எண்ணெய் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், நான்கு பேர் பலியாகினர்.

பலியானவர்களில் ஓட்டுநர், உதவியாளர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், விபத்து நிகழ்ந்ததைப் பார்த்ததும் அதிலிருந்தவர்களை மீட்கச் சென்ற  மூன்று பேரில், லாரி வெடித்துச் சிதறியதில் இருவர் உயிரிழக்க, ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.