காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,
இந்த நிலநடுக்கமானது நள்ளிரவு 12.37 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியது.
நிலநடுக்கத்தின் வடக்கு அட்சரேகை 33.48 டிகிரியாகவும், கிழக்கு தீர்க்கரேகை 75.59 ஆகவும், பஹல்காம் பகுதியில் 5 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த அக்டோபர் 8, 2005 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...