
பனாஜி: கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்த நிலையில், அது தற்போது 7.14 கோடியாக அதிகரித்திருப்பதன் மூலம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.
வழக்கமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான், வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது வழக்கத்தைக் காட்டிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், அதிகமான விற்பனை என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.