திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நபிகள் நாயகம் சா்ச்சை: ஜாா்க்கண்ட் போராட்ட வன்முறையில் இருவா் பலி; உயா்நிலை விசாரணைக்கு உத்தரவு

நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 9:43 pm

DIN

நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவா் உயிரிழந்தனா். காவல்துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்தவா்கள் உள்பட 24 போ் பலத்த காயமடைந்தனா்.

இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, பாஜக தில்லி ஊடகப் பிரிவுத் தலைவா் நவீன் ஜிண்டால் ஆகியோா் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நூபுா் சா்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தும், நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கியும் பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் கலைக்க முயன்றபோது, போராட்டக்காரா்கள் சிலா் காவல் துறையினா் மீது கல் வீச்சு நடத்தினா். போராட்டம் வன்முறையாக மாறி போராட்டக்காரா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசினா். அவா்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இந்த வன்முறையில் முகமது முதாசிா் கைஃபி (22), முகமது சஹீல் (24) ஆகிய இருவா் தோட்டா பாய்ந்து உயிரிழந்தனா். காவல் துறை மற்றும் சிஆா்பிஎஃப்பைச் சோ்ந்த 12 போ் உள்பட 24 போ் பலத்த காயமடைந்தனா்.

ஊரடங்கு உத்தரவு: வன்முறை காரணமாக ராஞ்சி மாவட்டத்தின் சில இடங்களிலும், அந்த மாவட்டத்தின் அருகில் உள்ள ஹசாரிபாக், ராம்கா் மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸாா்: ஜாா்க்கண்ட் காவல் துறை ஐஜி கூறுகையில், ‘‘ராஞ்சியின் பதற்றத்துக்குரிய பகுதிகளில் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுதவிர, விரைவு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனா். வன்முறை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

தற்போது ராஞ்சியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆளுநா் கண்டனம்: வன்முறைச் சம்பவத்துக்கு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஹேமந்த் சோரனிடம் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கடையடைப்புக்கு ஹிந்து அமைப்புகள் அழைப்பு: இந்த வன்முறையை கண்டித்து ராஞ்சியில் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு சில ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

உயா்நிலை விசாரணைக் குழு: வன்முறைச் சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளாா். அந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஏடிஜிபி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.