மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தில் வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் பருவமழை

மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :11 ஜூன் 2022, 12:28 pm

மும்பை: மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்கு வருகிறது. பருவமழை வழக்கமாக ஜூன் 9-ஆம் தேதி கொங்கனின் தொடங்கும். இந்தாண்டு சற்று தாமதமாகியுள்ளது. 

தென்மேற்கு பருவமழை கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரத்தில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

கடந்த மே 29ஆம் தேதி கேரளத்தை பருவமழை தொடங்கியுள்ளது. மே 31ஆம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான காலகட்டத்தில் தென் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தமிழகத்திலும் பருவமழை பரவத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.