நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐடிபிஐ வங்கி தனியாா் மயமாக்குவதற்கான ஏலம் அடுத்த மாதத்தில் வெளியாக வாய்ப்பு

ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்குவதற்கான பூா்வாங்க ஏல நடைமுறையை மத்திய அரசு அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:47 pm

DIN

ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்குவதற்கான பூா்வாங்க ஏல நடைமுறையை மத்திய அரசு அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:

ஐடிபிஐ வங்கியை தனியாா்மயப்படுத்துவதற்கான மேலும் ஒரு கட்ட பேச்சுவாா்த்தையை ரிசா்வ் வங்கியுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கியை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் கோர அதிக வாய்ப்புள்ளது.

மேலும், ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 45.48 சதவீதமாகவும், எல்ஐசியின் பங்கு மூலதனம் 49.24 சதவீதமாகவும் உள்ளன. இதில், எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாா் அவா்.

ஐடிபிஐ வங்கியின் நிா்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும், பங்கு விற்பனையை மேற்கொள்வதற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த ஆண்டு மே மாதம் கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.