இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கைது

அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. 

News image
Updated On :14 ஜூன் 2022, 7:15 am

DIN

அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதீர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடர்ந்து 2-வது நாளாக ஆஜராகிறார். நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முதலே நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

இந்நிலையில், இன்றும் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

Story image

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியா, செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதீர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.