ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு

ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :15 ஜூன் 2022, 10:18 am

DIN

ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள சித்ரகொண்டா மற்றும் ஒடிசாவின் தெற்குப் பகுதியில் உள்ள சில இடங்களில் ஏற்கனவே பருவமழைக்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியுள்ளன வானிலையின் புவனேஸ்வர் மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜார்சுகுடா, சுந்தர்கர், தியோகர், கியோஞ்சர், சம்பல்பூர், மயூர்பஞ்ச், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கஜபதி, கஞ்சம், மல்கங்கிரி, கோராபுட் மற்றும் நாபரங்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது

கஜபதி, கஞ்சம் மற்றும் பிற மாவட்டங்களைத் தவிர, ஒடிசாவின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.