மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேற்கு வங்கத்தில் நாளை பருவமழை தொடங்க வாய்ப்பு

மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :16 ஜூன் 2022, 7:29 am

மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

வங்காள விரிகுடாவில் இருந்து தென்மேற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசுவதால், அடுத்த ஐந்து நாள்களில் இமயமலையின் துணை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கூச் பெஹார் மற்றும் அலிபுர்துவார் ஆகிய பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், மாநிலத்தின் அனைத்து வட மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமைக்குள் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்காள மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும். இப்பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வியாழக்கிழமை கொல்கத்தாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் பகல் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.