மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினராயி விஜயன் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார். அதில், கேரளத்திற்கான தனது கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கரோனா பேராபத்துக் காலத்தில் கேரளத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் தங்களது வேலையினை இழந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பினர். அவர்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ரூ.2000 கோடி நிதியுதவி கேட்கப்பட்டது. கேரள மாநிலத்தின் இந்த வேண்டுகோளை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை என தெரிவித்தார். இதனை அவர் லோக கேரள சபா எனும் மாநாட்டில் தெரிவித்தார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது நேற்று ( ஜூன் 16) தொடங்கி வைத்தார்.