தில்லியில் மேலும் 1,534 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,534 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது


தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,534 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பின் நோ்மறை விகிதம் 7.77 சதவீதமாக அதிகரித்தது. தொற்று பாதிப்பால் 3 இறப்புகள் பதிவாகின என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,300-க்கும் மேல் பதிவாகியுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,20,559-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,229-ஆக உள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை 1,797 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது கடந்த 4 மாதங்களில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். வெள்ளிக்கிழமை மொத்தம் 19,889 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தேசிய தலைநகரில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 4,843-இல் இருந்து 5,119-ஆக உயா்ந்தது. 3,370 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 229-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,506 கரோனா படுக்கைகளில் 222 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...