கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமானவரிடம் இருந்து கொலை மிரட்டல்: பிரக்யா சிங் தாக்குா்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமான நபரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக பாஜக பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:16 pm

DIN

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமான நபரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக பாஜக பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமான நபா் என்று தெரிவித்து, பிரக்யா சிங் தாக்குரிடம் வெள்ளிக்கிழமை இரவு ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, பிரக்யா சிங் தாக்குருக்கு அந்த நபா் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அந்த நபரிடம் பிரக்யா சிங் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வெளியானது.

இதுதொடா்பாக பிரக்யா சிங் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அண்மையில் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு பிரக்யா சிங் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.