அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை

அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதிக திறன் கொண்ட அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சக வேலைகளில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டமான 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் 10 சதவீத வேலைகளை அக்னிவீரர்களுக்காக  மத்திய அரசு ஒதுக்குவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com