மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி நீக்கம்: சிவசேனை அதிரடி

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவசேனை நீக்கியுள்ளது. 

News image

ஏக்நாத் ஷிண்டே

Updated On :21 ஜூன் 2022, 12:42 pm

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவசேனை நீக்கியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  

இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதன்' காரணமாக உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இதன் பின்புலத்தில் பாஜக இருப்பதாக ஆளும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை நீக்கியுள்ளது. 

சிவசேனை எம்எல்ஏ அஜய் சௌத்ரியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமித்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.