ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2022, 6:45 am

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் தில்லியில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும்பொருட்டு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி எதிர்க்கட்சிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தார். இதன் முதல் கூட்டம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. 

அதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பொது வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, வேட்பாளரைத் தேர்வு செய்யும் இறுதிக்கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சரத் பவார் தலைமையில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். 

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து, கோபாலகிருஷ்ண காந்தியும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளாா். இதையடுத்து மத்திய முன்னாள் அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா(திரிணமூல்)வை போட்டியிட வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

திரிணமுல் காங்கிரஸில் இருந்த வந்த யஷ்வந்த் சின்ஹா, தற்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.