சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 80 ஆண்டுகள் சிறை

கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 80 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியைப் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 64-வயது முதியவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கர்ப்பமாக்கியது, 12 வயதிற்குட்பட்ட சிறுமியை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது என ஒவ்வொரு பிரிவிற்கும் சேர்த்து 81 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இருப்பினும், மொத்த தண்டனைக் காலமும் ஒரே நேரத்தில் நடக்கும் என்பதால் மொத்தமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட உள்ளது.

மேலும்,  சிறப்பு விரைவு நீதிமன்றம்  ரூ.2.25 லட்சம் அபராதமும்  விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com