நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,33,62,294-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 88,284 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது.
தொற்று பாதித்தவர்களில் புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,954 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | வாடகைத் தாய்க்கு 3 ஆண்டு மருத்துவக் காப்பீடு: விதிமுறைகள் வெளியீடு
கரோனாவில் இருந்து 13,0290 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,27,25,055-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,96,77,33,217 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 13,71,107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரம்: தொடா்கிறது நெருக்கடி