கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நீதி ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்!

நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

News image

பரமேஸ்வரன் ஐயர்

Updated On :24 ஜூன் 2022, 6:08 pm IST

நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய அமைப்பு நீதி ஆயோக். தேசிய வளர்ச்சிக் கொள்கைகளை இது பரிந்துரை செய்கிறது. 

இதன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அமிதாப் காந்த்-ன் பதவிக் காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து, பரமேஸ்வரன் ஐயர் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பரமேஸ்வரன் ஐயர், 1981 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்துள்ளார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றியவர். உலக வங்கி, ஐ.நா. அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். 

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) அறிவிப்பின்படி, ஆரம்ப பதவிக்காலமாக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்துவரும் அமிதாப் காந்த், 1980 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். கடந்த 2016 முதல் நீதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தொழில்துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், முதலீடு சார்ந்த மத்திய அரசின் கொள்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.