நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய அமைப்பு நீதி ஆயோக். தேசிய வளர்ச்சிக் கொள்கைகளை இது பரிந்துரை செய்கிறது.
இதன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அமிதாப் காந்த்-ன் பதவிக் காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து, பரமேஸ்வரன் ஐயர் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பரமேஸ்வரன் ஐயர், 1981 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்துள்ளார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றியவர். உலக வங்கி, ஐ.நா. அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) அறிவிப்பின்படி, ஆரம்ப பதவிக்காலமாக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்துவரும் அமிதாப் காந்த், 1980 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். கடந்த 2016 முதல் நீதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தொழில்துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், முதலீடு சார்ந்த மத்திய அரசின் கொள்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதையும் படிக்க | குழந்தைகளைக் குறிவைக்கும் மொபைல் 'ஆப்'(பு)கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அண்ணாமலை அடுத்து என்ன செய்யப் போகிறார்?

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


