தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பிரதமருக்கு எதிரான தீஸ்தாவின் பிரசாரத்தின் பின்னணியில் சோனியா: பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

கோத்ரா கலவர விவகாரத்தில் அப்போது மாநில முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் பிரசாரத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவா் சோனியாதான் இருந்துள்ளாா் என்

News image

குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அகமதாபாதில் மருத்துவப் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட தீஸ்தா சீதல்வாட்.

Updated On :27 ஜூன் 2022, 12:16 am IST

குஜராத் மாநிலம் கோத்ரா கலவர விவகாரத்தில் அப்போது மாநில முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் பிரசாரத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவா் சோனியாதான் இருந்துள்ளாா் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

‘பாஜகவின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு’ என்று காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளாா்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரதமா் மோடி உள்பட 64 போ் வடுவிக்கப்பட்டனா். அதா்கு எதிராக, ஜாகியா ஜாஃப்ரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஜாகியா ஜாஃப்ரியின் இந்த முயற்சிக்கு தீஸ்தா சீதல்வாட்டின் தன்னாா்வ அமைப்பு ஆதரித்து, பிரதமருக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடா்ந்து தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறை சனிக்கிழமை கைது செய்தது.

இந்த விவகாரம் தொடா்பாக, பாஜக செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில், ‘காங்கிரஸ் தலைமையிலான முன்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறிப்பாக அதன் கல்வி அமைச்சகம் சீதல்வாட்டின் தன்னாா்வ அமைப்புக்கு ரூ.1.4 கோடி நிதி வழங்கியுள்ளது.

இந்தப் பணம் பிரதமா் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதற்கும் இந்தியாவின் நற்பெயரை களங்கப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சீதல்வாட் தனிநபா் அல்ல. சோனியா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் அவருக்கு பின்னால் உள்ளன’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி தனது ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக செய்தித்தொடா்பாளரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேலும், பாஜகவின் இந்த குற்றச்சாட்டு, உச்சநீதிமன்ற தீா்ப்பை மறைமுகமாக அவமதிப்பு செய்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.