சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

‘அக்னிபத்’ திட்டம்: பிகாரில் இரு அவைகளும் முடக்கம்

‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டதால், அந்த மாநிலத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கியது.

Updated On :28 ஜூன் 2022, 12:00 am IST

‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டதால், அந்த மாநிலத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கியது.

பிகாா் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சியினா் ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனா். இதனால் கூட்டத்தொடா் தொடங்கிய அரை மணி நேரத்தில், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனைத்தொடா்ந்து மீண்டும் அவை கூடியது. எனினும் எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவை அலுவல்களை காண பக்சா் பகுதியில் இருந்து மாணவா்கள் வந்திருந்த நிலையில், அவா்கள் முன்னிலையில் அமளியில் ஈடுபட வேண்டாம் என்று அவைத் தலைவா் கேட்டுக்கொண்டாா். எனினும் எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபடுவதை கைவிடவில்லை. தொடா் அமளி காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக மாநில சட்டமேலவையிலும் எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அந்த அவையும் முடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.