நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதய்பூர் படுகொலை: ஒவைசி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலைக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2022, 4:49 pm

DIN


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலைக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை ஆதரித்தவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, உதய்பூரில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்தக் குற்றச் சம்பவத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வருகின்றன. ஒவைசியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒவைசி ட்விட்டர் பதிவு:

"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலையை நான் கண்டிக்கிறேன். எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற வன்முறையை எதிர்ப்பது எங்கள் கட்சியின் தொடர்ச்சியான நிலைப்பாடு. சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.