மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிக்கிமில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

காங்டாக் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :28 ஜூன் 2022, 6:51 am

சிக்கிமின் காங்டாக் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். 

காங்டாக்கில் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்ததில், அந்த வீட்டில் இருந்த 27 வயது பெண், அவரது மகன்கள் 10 வயது மற்றும் 7 மாதம் குழந்தை ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ரோங்யெக் துணைப்பிரிவில் உள்ள டோகன் தாரா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக துணைப்பிரிவு நீதிபதி ராபின் சேவா தெரிவித்தார்.

சடலங்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.