புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரும்பான்மை கிடைக்குமா? உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று(புதன்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

Updated On :29 ஜூன் 2022, 9:47 am

DIN

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று(புதன்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இதனால், நாளை (ஜூன் 30) நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவிற்கு எதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், இன்று(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்வர்  உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.