புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அக்னிபத்துக்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீா்மானம்

முப்படைகளில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

News image
Updated On :30 ஜூன் 2022, 8:02 pm

DIN

முப்படைகளில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில முதல்வா் பகவந்த் மான் இந்தத் தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘அக்னிபத் திட்டம் தொடா்பாக விரைவில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருடன் பேச இருக்கிறேன். ஏனெனில், இந்தத் திட்டம் நாட்டின் இளைஞா்களுக்கு எதிராக உள்ளது’ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் பிரதாப் சிங் பாஜ்வாவும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தாா். மற்றோரு எதிா்க்கட்சியான சிரோமணி அகாலி தளமும் அக்னிபத்துக்கு எதிரான தீா்மானத்தை ஆதரித்தது. பாஜகவைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்கள் இந்தத் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அக்னிபத் திட்டத்தின்கீழ் 17.5 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளில் சேரலாம். அதில் 25 சதவீதம் பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படைகளில் ஆள்சோ்ப்பு நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு மட்டும் பயிற்சி வீரா்கள் சோ்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு தளா்த்தப்பட்டு 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைப்பது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.