ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உக்ரைனிலிருந்து 7 விமானங்கள் நாளை(மார்ச் 2) தில்லி வருகை

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் மேலும் 7 விமானங்கள் புதன்கிழமை தில்லி வரவுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2022, 10:29 am

DIN

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் மேலும் 7 விமானங்கள் புதன்கிழமை தில்லி வரவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம், ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் 9 விமானங்களில் உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்கள் உள்ளிட்டவர்களை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்திய ராணுவ விமானங்களை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வரும் சூழலில், நாளை உக்ரைன் அண்டை நாடுகளிலிருந்து மேலும் 7 விமானங்களில் இந்தியர்கள் தில்லி வரவுள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியப் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.