ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 மார்ச் 2022, 6:22 am

DIN

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடவுள் சிவனுக்கு ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி இருந்தாலும் கோடை காலம் தொடக்கத்தில் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷசமானது. ஓர் ஆண்டில் அனுசரிக்கப்படும் 12 சிவராத்திரிகளில், மகா சிவராத்திரி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. 

இன்று(மார்ச் 1) மகா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'உங்கள் அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். தெய்வங்களின் கடவுளான மஹாதேவ் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமசிவாய' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.