கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7-ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 202 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 971 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனார்.
கர்நாடகத்தில் தினசரி இறப்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.
மாநிலத்தில் குணமடையும் விகிதம் 0.52 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 3.47 சதவீதமாகவும் உள்ளது.
மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 39,957 ஆக உயர்ந்துள்ளது.