ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெட்ரோல், டீசல் விலை அடுத்த வாரம் உயா்வு?

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:33 am

DIN

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை (ரூ.7,500) கடந்துவிட்டது. இந்தியாவின் எரிசக்தி 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 118 நாள்களாக திருத்தியமைக்கப்படாத நிலையில், எரிபொருள் விலையில் லிட்டருக்கு ரூ.9 இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை ஈடுசெய்யும் வகையில் பெட்ரோல்- டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-க்குப் பின்னா் முதன்முறையாக கச்சா எண்ணெயின் விலை தற்போது 110 டாலரை (ரூ.8,250) கடந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன்- ரஷியா போா் காரணமாக ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னா் அதிகபட்சமாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 102 அமெரிக்க டாலரை (ரூ.7,650) தாண்டியதாக எண்ணெய் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களும் நிறைவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று ஜேபி மாா்கன் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாா்ச் 7-இல் நடைபெறுகிறது. மாா்ச் 10-இல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.