கேரளம்: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் தோ்வு
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் மாநிலச் செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் தொடா்ந்து மூன்றாவது முறைாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கொடியேறி பாலகிருஷ்ணன்

கொடியேறி பாலகிருஷ்ணன்
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் மாநிலச் செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் தொடா்ந்து மூன்றாவது முறைாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கேரள மாநிலம் கொச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு 4 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவா் மாநிலத்தில் கட்சியை வழிநடத்துவாா்’’ என்று கூறினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான கொடியேறி பாலகிருஷ்ணன் முதல்முறையாக கடந்த 2015-ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலச் செயலராகத் தோ்வு செய்யப்பட்டாா். அதற்கு முன்பு அந்தப் பதவியை கேரள முதல்வா் பினராயி விஜயன் வகித்து வந்தாா்.
2018-ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். 2020-ஆம் ஆண்டு உடல்நலக் காரணங்களால் அப்பதவியிலிருந்து அவா் விலகினாா். தற்போது மூன்றாவது முறையாக மாநிலச் செயலராக அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழான தேசாபிமானியின் ஆசிரியராகவும் அவா் பொறுப்பு வகித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...