திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விபத்தை தவிர்க்க ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள்...உத்தரப் பிரதேசத்தில் சுவாரஸ்யம்

தீ பரவாமல் தவிர்க்கும் வகையில் ரயில் பெட்டிகளை பயணிகள் கைகளால் தள்ளுவதை விடியோவில் காணலாம்.

News image
ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள்
Updated On :5 மார்ச் 2022, 11:10 am

DIN

சஹரன்பூரிலிருந்து தில்லி செல்லும் பயணிகள் ரயில்
உத்தரப் பிரதேசம் தௌராலா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, என்ஜினிலும் இரண்டு ரயில் பெட்டிகளிலும் தீ பிடித்து கொண்டது. 

இதையடுத்து, ரயிலின் என்ஜின் மற்றும் அந்த இரண்டு பெட்டிகழளிலிருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்க ரயிலை பயணிகள் கைகளால் தள்ளும் விடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில், பயணிகளுடன் ரயில் நிலைய அலுவலர்கள் சேர்ந்து தீ பரவியுள்ள பெட்டிகளிலிருந்து மற்ற பெட்டிகளை தனியாக தள்ளுவதை காணலாம். 

பின்னர், தௌராலா ரயில் நிலையத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதன் காரணமாக, ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. இதில், எந்த வித உயிரிழுப்பும் காயமும் ஏற்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.