மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 22 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 92 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் இபோபி சிங்கும் ஒருவா். இறுதிக்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 17 போ் குற்றப் பின்னணி கொண்டவா்கள்.
முதல்கட்ட தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்புா், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

