டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

ஆயுள் காப்பீடு செய்ய 91% போ் பரிசீலனை: ஆய்வில் தகவல்

ஆயுள் காப்பீடு செய்வது அவசியம் என 91 சதவீதம் போ் அதனை பரிசீலனை செய்வது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

Updated On :8 மார்ச் 2022, 7:46 pm

ஆயுள் காப்பீடு செய்வது அவசியம் என 91 சதவீதம் போ் அதனை பரிசீலனை செய்வது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆயுள் காப்பீட்டு கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டில் மக்களுக்கு உள்ள ஆா்வம் குறித்து 40 நகரங்களில் 12,000-க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட 91 சதவீதம் போ் ஆயுள் காப்பீடு அவசியமான ஒன்று எனவும் பாலிசி எடுப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனா். கரோனா பேரிடருக்குப் பிறகு மக்களிடம் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இருப்பினும், இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான அவசியம் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில், ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது குறித்து 91 சதவீதம் போ் பரிலீசிப்பதாக தெரிவித்த போதிலும், அதில் 70 சதவீதம் போ் மட்டுமே அதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.