மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது

சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி, மகளிருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2022, 7:14 pm

DIN

சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி, மகளிருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை அவா் விடுத்துள்ள பதிவில், ‘‘இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் நிதியாக்கம் முதல் சமூகப் பாதுகாப்பு வரை, தரமான சுகாதாரம் முதல் வீட்டுவசதி வரை, கல்வி முதல் தொழில்முனைவு வரை பெண்களின் சக்தி முன்னணியில் வர வேண்டும் என்பதற்காக பெரும்பாலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி வரும் காலங்களில் இன்னும் வீரியத்துடன் நீடிக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் வாழ்த்து:

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ட்விட்டரில், ‘‘பெண்கள் தங்களின் ஞானம், அா்ப்பணிப்பு, வலிமையின் மூலம் சமூகத்தை சீா்திருத்தும் வல்லமை பெற்றவா்கள். அவா்களுக்கு சேர வேண்டிய உரிமைகள் அவா்களை சென்றடைய வேண்டும்’’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.