நிகழ் நிதியாண்டில் ரூ.800 கோடி மதிப்புள்ள மருந்துகள், மக்கள் மருந்தகங்களில் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.5,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது (2015) முதல், இதுவரை ரூ.13,000 கோடி அளவுக்கு நடுத்தர-ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 8,500-க்கும் மேற்பட்ட ‘மக்கள் மருந்தகங்கள்’ திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு இந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது. இதுவரை 21 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனையாகி நாடு முழுவதும் பெண்களின் வாழ்க்கையை இந்த ‘மக்கள் மருந்தகங்கள்’ எளிதாக்கியுள்ளன.