சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கரோனா 4ஆம் அலை ஏற்படாது: தொற்றுநோயியல் நிபுணர் கருத்து

இந்தியாவில் கரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், தொற்றுநோயியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2022, 11:11 am

DIN

இந்தியாவில் கரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், தொற்றுநோயியல்  நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அடிப்படையில் நான்காம் அலை ஏற்பட வாய்ப்புகள் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தொற்றுநோயியல் (வைராலஜி) நிபுணர் ஜேக்கப் ஜான், நேற்றைய (மார்ச் 8) நிலவரப்படி இந்தியாவில் 3,993 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 நாள்களுக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக்குறைந்த பாதிப்பு இதுவாகும்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் கரோனா மூன்றாம் அலை குறைந்து வருகிறது. கரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கரோனா பாதிப்புகள் பதிவாகியது. 

கடந்த நான்கு வாரங்களாகவே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வந்துள்ளது. இதனால் தற்போது கரோனா மூன்றாவது அலையின் இறுதிக்கட்டத்தை நாம் எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறினார். 

இரண்டாவது அலையின்போது, கரோனா மூன்றாவது அலை ஏற்படாது என்று நிபுணர்கள் முன்பு கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மூன்றாவது அலை ஏற்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

கரோனா மூன்றாவது அலை ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்டது. ஒமைக்ரான் வகை மாற்றமடைந்த வைரஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தநேரத்தில் இருந்த மாற்றமடைந்த கரோனா வகையைக் கொண்டே மூன்றாவது அலை ஏற்படாது என்ற கருத்து நிலவியது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.