உதம்பூரில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, 14 பேர் காயம்
ஜம்முவின், உதம்பூர் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.


ஜம்முவின், உதம்பூர் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உதம்பூர் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் குறித்து விரைந்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது என்று சிங் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...