உக்ரைன் மீது ரஷியா தீவிரமாகத் தாக்குதல் நடத்திய நேரத்தில், இரு நாட்டு அதிபா்களுடனும் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்காக, பாதுகாப்பு வழித்தடம் அமைக்க வேண்டும் என்று இரு நாட்டு அதிபா்களிடமும் பிரதமா் மோடி கோரிக்கை விடுத்தாா். அதற்கு சம்மதித்த இரு நாடுகளும், இந்தியா்கள் வெளியேறுவதற்கு வசதியாக வழித்தடத்தை அமைத்துக் கொடுத்தன. இறுதியாக, உக்ரைனின் சுமி நகரில் இருந்து சுமாா் 600 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா். உக்ரைனில் தவித்த இந்தியா்கள் அனைவரும், அண்டை நாடுகளை வந்தடைந்து, அங்கிருந்து விமானங்கள் மூலமாக இந்தியா வந்து சோ்ந்தனா்.