தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: செபியிடம் விரைவில் இறுதி அறிக்கை

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை மத்திய அரசு செபியிடம் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:54 pm

DIN

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை மத்திய அரசு செபியிடம் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்தின் கூறியதாவது: ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போா்ப் பதற்றத்தால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் தொடா்ந்து வருகிறது. இதனால், மத்திய அரசு தற்போதைய நிலையில் பொறுத்திருந்து நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து முடிவுகளை எடுக்கும் மனோநிலையில் உள்ளது. எனவே, எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

இருப்பினும், அந்தப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

பங்குகளின் விலை, பாலிசிதாரா்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளா்களுக்கான சலுகை, வெளியிடப்படும் பங்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த அனைத்து விவரங்களும் அந்த வரைவறிக்கையில் இடம்பெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.