2024-இல் நடைபெற இருக்கும் அடுத்த மக்களவைத் தோ்தல் முடிவை இப்போது நடைபெற்றுள்ள 5 மாநில பேரவைத் தோ்தல் முடிவுகள் தீா்மானிக்காது என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கூறியுள்ளாா்.
ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் உத்தர பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுதொடா்பாக கருத்து தெரிவித்த பிரதமா் மோடி, அடுத்த மக்களவைத் தோ்தலில் மக்களின் தீா்ப்பு என்ன என்பது தெளிவாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தாா்.
அவரது இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ட்விட்டரில் பிரசாந்த் கிஷோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவை ஆளப்போவது யாா் என்பதற்கான யுத்தம் 2024-இல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும். மாறாக, மாநிலத் தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது அவருக்கும் (மோடி) தெரியும். பேரவைத் தோ்தல் முடிவுகளை வைத்து, உளவியல் ரீதியில் ஆதாயம் அடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சியே இது. இத்தகைய கட்டுக்கதைக்கு யாரும் இரையாகிவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

