மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லி தீ விபத்து: தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

News image
Updated On :12 மார்ச் 2022, 10:17 am

DIN

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

தில்லி தீயணைப்பு சேவைகளின் தலைவர் அதுல் கர்க்  கூறுகையில்,  எரிந்த 7 உடல்களை மீட்டுள்ளதாகவும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும் தீ மிக வேகமாக பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்று கூறினார்.

60 குடிசைகள் எரிந்துள்ளது. தீ விபத்துக்கான காரணங்களை இன்னும் அறியப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமானதாகவும், 7 பேர் பலியானதாகவும் தில்லி காவல் துறையினர் இன்று காலை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக  தில்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.