புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் இடைத்தேர்தல்

மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள பேரவை மற்று மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. 

News image

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :12 மார்ச் 2022, 2:05 pm

DIN

மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள பேரவை மற்று மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. 

இதன்படி பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் தலா 1 மக்களவை, 1 சட்டப்பேரவை தொகுதிக்கும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது. 

மார்ச் 24ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 28 ஆம் மதேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். பதிவான வாக்குகள் ஏப்ரல் 16ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் தற்போது இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.