மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜிநாமா செய்த பிரமோத் சாவந்த்...கோவாவின் அடுத்த முதல்வர் யார்?

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவிவருகிறது.

News image
ராஜிநாமா செய்த பிரமோத் சாவந்த்
Updated On :12 மார்ச் 2022, 9:19 am

DIN

கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக ஆயத்தமாகி வரும் நிலையில், முதல்வர் பொறுப்பை பிரமோத் சாவந்த் ராஜிநாமா செய்துள்ளார். வெளியான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின்படி 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பாஜக 20 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரவாதி கோமந்தாக் கட்சியும் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரமோத் சாவந்த் ட்விட்டர் பக்கத்தில், "கோவா மக்களின் ஆசியுடன், கடைசி மனிதரும் உயர வேண்டும் என்ற கொள்கையில் செயல்படும் பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இரட்டை எஞ்சின் அரசு மூலம் கோவா தொடர்ந்து முன்னேறும்" என பதிவிட்டுள்ளார்.

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவிவருகிறது. பாரம்பரியமிக்க சங்கேலிம் தொகுதியில் 666 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரமோத் சாவந்துக்கு பதில் வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டுவருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இதுகுறித்து பிரமோத் கூறுகையில், "நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் நாங்கள் (பாஜக) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளோம். இது ஒரு பெரிய விஷயம். மாநிலம் வாரியாக பிரசாரம் செய்தும் எனது சொந்த தொகுதிக்கு செல்ல முடியாததால் எனக்கு இது மிகவும் சவாலாக இருந்தது. என் தொண்டர்களே எனக்காக பிரசாரம் செய்தனர்" என்றார்.

அடுத்த முதல்வராக சாவந்த் தொடர்வாரா என சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானேவிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எனக்குத் தெரியாது, இது ஒரு உணர்ச்சிகரமான கேள்வி. இதற்கான விடை அளிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை" என்றார்.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தனித்தும், கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. மகாராஷ்டிரவாதி கோமந்தாக் கட்சியுடன் திரிணாமூல் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.