தில்லி தீ விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகக்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறியதுடன், அவர்களை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 

கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமானதாகவும், 7 பேர் பலியானதாகவும் தில்லி காவல் துறையினர் இன்று காலை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com