![கோப்புப்படம்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2022%2F3%2F12%2Foriginal%2Fwar-9.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தில்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பலியான 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.