நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது பாதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-ஆவது பாதி கூட்டத்தொடா் மாா்ச் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல்பாதியில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவேளையின்றி செயல்பட்டது.
இரண்டாவது பாதியில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலங்களவை செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 1 மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்படவுள்ளது. மொத்தம் 19 அமா்வுகள் நடைபெறவுள்ளதால், முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.
அமைச்சா் அல்லாத தனிநபா்கள் சமா்ப்பிக்கும் விவகாரங்களுக்கு 4 நாள்கள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு அமா்வின்போதும் கேள்வி நேரம், உடனடி கேள்வி நேரம் ஆகியவற்றுக்கு தலா 1 மணி நேரம் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதியில் மாநிலங்களவையின் செயல்திறன் 101.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


